Skip to main content

அணிலாடும் முன்றில் - நா முத்துக்குமார்


நா முத்துக்குமார் சினிமா பாடல்கள் வழியே பரிச்சயமான ஒரு கவிஞர். அவருடைய இலக்கிய படைப்புகளின் மீது எனக்கு மிக குறைவான ஈர்ப்பே இருந்து வந்தது. நாஞ்சில் நாடன் மற்றும் பவா செல்லத்துரை ஆகிய ஆளுமைகளின் சுட்டிக்காட்டல்கள் மூலம் முத்துக்குமாரின் படைப்புகளை தேடும் முயற்சியில் இறங்கினேன். டொரோண்டோ பொது நூலகங்கள் எதுவும் அவரின் படைப்புக்களை கொண்டிருக்க வில்லை. நாகர்கோவில் செந்தரம் bookstore பெருமாள் அவர்களை தொடர்பு கொண்டு சில புத்தகங்களை வரவழைத்தேன். 

அணிலாடும் முன்றில் மிக நேர்த்தியான நேர்மையான படைப்பு. மத்தியதர குடும்பங்களில் உலா வரும் உறவுகளை காஞ்சிபுர மாவட்ட வாசனை வீச உணர்வும் உண்மையும் அங்கங்கே கவித்துவம் ததும்ப பேசும் நேர்த்தி மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுவதோடு நம் குடும்ப உறவுகளையும் மனிதர்களையும் நினைவுக்கு கொண்டு வந்து விடுகிறது . மீண்டும் முத்துக்குமாரின் படைப்புகளை தேடி படிக்கும் ஆர்வத்தையும், 41 வயதுக்குள் காலம் களவாடிவிட்ட ஆற்றல்மிக்க தமிழ் படைப்பாளியை இழந்துவிட்ட ஆதங்கத்தையும் அளிக்கிறது இந்த வாசிப்பனுபவம்.



Comments

Popular posts from this blog

நாகர்கோயில் சுதர்சன் ஜவுளிக் கடையிலிருந்து சுரா எனும் இலக்கிய பேராண்மை

(பேராண்மை = prowess அல்லது அருந்திறம் என்ற பொருள் கொள்க)   நாகர்கோவில் மணிமேடை சந்திப்பு (Tower Junction) எனது சிறுவதிலேயே பரிச்சயமான ஒன்று . அங்குள்ள சுதர்சன் ஜவுளி கடையும் மிகப் பரிச்சயமான ஸ்தாபனம் . எனது 44 - ஆவது வயதில் எனை ஒரு புதிய தமிழிலக்கிய வாசகன் என சொல்லிக்கொள்ளக் கூச்சப்பட வைக்கும் விஷயம் , சுதர்சன் உரிமையாளர் மற்றும் தமிழ் கூறும் நல்லுலகின் இலக்கிய பேராற்றல் , நவீன படைப்பிலக்கிய மேதை , சிந்தனையாளர் காலம் சென்ற சுந்தர ராமசாமி அவர்களை தெரியாமலிருந்ததும் அவரின் படைப்புகளில் ஒன்றைக் கூட அறியாமலிருந்தும் தான் .   சுரா பற்றிய ஜெயமோகனின் பேச்சுக்களை கேட்ட பிறகு ஒரு புளியமரத்தின் கதை நாவலை வாங்கி படித்தேன் . சொல்லத்தகுந்த சிந்தனை நீட்சிகளையோ   படைப்பிலக்கியவாதியின் அனுபவத்தைக் வாசகனுக்கு கடத்தும் வித்தையையோ அந்த வாசிப்பனுபவம் எனக்கு தர வில்லை என்ற போதிலும் இது ஒரு சாதாரண , எனக்கு இது வரையிலும் பரிச்சயமான மொழி நடையையோ கதையின் களத்தை , அது நடந்த காலச்சூழலை , அதன் கதாபாத்திரங்களை ...

சிதம்பர நினைவுகள் – வாசிப்பனுபவம்

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு என்ற மலையாள கவியை ஒரு சினிமா மற்றும் தொலைக்காட்சி நடிகன் என்ற அளவில் மாத்திரமே அறிமுகம். எங்களூர் எழுத்தாளரான ராம் தங்கத்தின் எழுத்துக்களை பிரசரித்த வம்சி புக்ஸ் நிறுவனம் வெளியிட்டதால் இந்த நூல் எனது வாசிக்கும் பட்டியலில் சேர்ந்தது. இதற்கு முன் Paulo Coelho வின் The Alchemist மற்றும் கல்பட்டா நாராயணன்   போன்ற சிலரின் மொழி பெயர்ப்புகளையே படித்துள்ளேன் . இதனை படித்து முடிக்கையில் Florida- வின் Miami நகரத்திலிருந்து Costa Rica- வின் Liberia வை நோக்கிய விமான பயணத்தில் பறந்து கொண்டிருந்தேன்.   படிக்க படிக்க மனித வாழ்க்கையின் மகோன்னதமான சில அனுபவங்களை, நேர்மையும், தன்னிலை சறுக்கல்களை மறைக்காத உண்மை உணர்வும் மேலோங்கிய கவி நேர்த்தி மிக்க கட்டுரைகளில் கரைந்து போனேன். Dr Paul Kalanithi- யின் When Breath Becomes Air - க்கு பிறகு, ஒரு நூலை படித்து என் கண்கள் குளமாகி போகும் உணர்ச்சி மேலிட்ட மனோநிலையில் ததும்பி வழிந்தேன். வானூர்தியின் சாளரத்துக்கு பக்கத்திலமர்ந்து    சினிமா பார்த்துக் கொண்டிருந்த என் மனைவியை தாண்டி வெளியே பார்க்கைய...

"Flagpole" - Landing(Re-entering) into Canada

This article and the facts provided are absolutely time-sensitive, so readers are requested to check / validate the relevance of the contents whenever they wish to exercise the options explained below. If at all it's relevant, this is relevant and may be useful only for those who currently reside in Canada. The final and conclusive step in the process of "Applying Canadian Permanent Residence" is the one by which the applicants and their dependents enter Canada and do the "Landing". This is a required step even if the applicant resides in Canada as a temporary resident or visitor. Such applicants who reside within Canada, can choose to drive/travel up to their nearest border with United States and cross the borders and re-enter back in Canada without a valid US Visa. The informal provision that allows this type of border crossing solely for the purposes of re-entering Canada for landing is called " Flagpole " Applicants along with their dependents( who...